டோலிவுட்டிற்கு செல்லும் தமிழ் சீரியல் நடிகை!
ADDED : 1457 days ago
சென்னைவாசியான லீஷா எக்லைர்ஸ் மாடலிங் துறையில் பிஸியாக இருந்து வந்த காலக்கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. லீஷா தமிழில் 'பலே வெள்ளையத்தேவா','பொது நலன் கருதி','மடை திறந்து' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். எனினும் அவருக்கு பெயரும் புகழும் கொடுத்தது என்னவோ சீரியல் தான். லீஷா, கண்மணி தொடரில் நாயகியாக நடித்திருந்தார். அந்த தொடர் லீஷாவை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சென்று பிரபலமாக்கியது.
தொடர்ந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் சரியான வாய்ப்பிற்காக காத்திருந்த அவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக டான்ஸ், மாடலிங் என ஹாட்டான பதிவுகளால் ரசிகர்களை பெருக்கிக்கொண்டார். தற்போது அவருக்கு தெலுங்கில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்ட லீஷா, அவர் நடிக்கும் படத்திற்கு ரைட் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பலரும் தங்களது வாழ்த்துகளை லீஷாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.