உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம்

பூஜா ஹெக்டேவை சோகமாக்கிய புத்தகம்

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து பிசியாக நடித்து வரும் சில நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சி, சுற்றுலா, படப்பிடிப்பு உள்ளிட்ட தன்னை பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். படங்களில் நடிக்கும் நேரங்கள் தவிர்த்து மீதி நேரங்களில் புத்தகம் படிப்பதற்கு செலவிடும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சல்லி ரூனே என்கிற எழுத்தாளர் எழுதிய நார்மல் பீப்பிள் என்கிற நாவலை வாசித்துள்ளார்.

அந்த நாவல் குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது இந்தப்புத்தகம் உங்கள் இதயத்தை உடைத்து விடும். குறைபாடுள்ள கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான எதிர்மறை கதாபாத்திரங்கள்.. வாவ்” என கூறியுள்ளார். ஆனால் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சோகமாகி விட்டார் பூஜா ஹெக்டே. புத்தகத்தை கையில் வைத்தபடி சோகமாக படுத்திருக்கும் தனது புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !