அக்சய்குமார் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்
ADDED : 1500 days ago
கொரோனா இரண்டாவது அலைக்குப்பிறகு ஹிந்தியில் வெளியான படங்கள் எதுவும் வசூலிக்காத நிலையில், அக்சய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவன்ஷி படம் நவ., 5-ந்தேதி வெளியாகி இதுவரை ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். இவர் தமிழில் வெளியான சிங்கம் படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்தும், டெம்பர் தெலுங்கு படத்தை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்தும் ரீமேக் செய்தவர்.
அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து இப்போது அக்சய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார். இந்தநிலையில், இந்த படம் திரையிட்டு ஒரு மாதமான நிலையில் நெட் பிளிக்ஸில் நிறுவனம் 70 முதல் 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.