உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரலில் துப்பறிவாளன் 2 துவக்கம்

ஏப்ரலில் துப்பறிவாளன் 2 துவக்கம்

‛துப்பறிவாளன்' படம் தந்த வெற்றியால் இயக்குனர் மிஷ்கின் - நடிகர் விஷால் கூட்டணியில் ‛துப்பறிவாளன் 2' பட அறிவிப்பு வெளியானது. லண்டனில் பட வேலையை துவக்கினர். ஆனால் இருவரிடையே பிரச்னை ஏற்பட மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். அதன்பின் ஒருவரை ஒருவர் மாரி மாரி விமர்சனம் செய்து வந்தனர். பிறகு இந்த படத்தை தானே இயக்க போவதாக விஷால் அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. தொடர்ந்து மற்ற படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் கதையில் சில மாற்றம் செய்து வரும் விஷால், 2022 ஏப்ரல் முதல் படப்பிடிப்பை லண்டனில் துவங்க போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புது போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். படத்தின் கதைக்களம் லண்டனில் நிகழ்வது போன்று உருவாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்க, இளையராஜா இசையமைக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !