உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒருத்தீயாக மீண்டு(ம்) வரும் நவ்யா நாயர்

ஒருத்தீயாக மீண்டு(ம்) வரும் நவ்யா நாயர்

'அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து இயக்குனர் சேரனின் 'மாயக்கண்ணாடி' ராமன் தேடிய சீதை என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் அவ்வப்போது சில சினிமா விழாக்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். கடந்த 2012க்கு பிறகு அவர் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

இந்தநிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து 'ஒருத்தீ' என்கிற படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நவ்யா நாயர். இயக்குனர் விகே பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நல்ல கதைகள் வரும் பட்சத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !