உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதற்கும் துணிந்தவன் - வாடா தம்பி பாடலுக்கு வரவேற்பு

எதற்கும் துணிந்தவன் - வாடா தம்பி பாடலுக்கு வரவேற்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வாடா தம்பி என்ற பாடல் நேற்று மாலை 6மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் - அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள். பாடல் வெளியான 20 மணிநேரத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளும், 2.83 லட்சம் லைக்குகளும் கிடைத்தன. தற்போது இந்த பாடல் சோஷியல் மீடியாவில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !