உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா- 2 படத்திற்காக ஊக்கத் தொகை பெறும் ராஷ்மிகா

புஷ்பா- 2 படத்திற்காக ஊக்கத் தொகை பெறும் ராஷ்மிகா

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் வெளியானது. தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, இந்த புஷ்பா படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதோடு முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ராஷ்மிக்காவுக்கு ஊக்கத்தொகை வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.


அந்தவகையில் புஷ்பா முதல் பாகத்தில் நடிக்க அவருக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்து இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார் ராஷ்மிகா. மேலும், ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !