உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்மஸ்ரீ விருது - சவுகார் ஜானகி மகிழ்ச்சி

பத்மஸ்ரீ விருது - சவுகார் ஜானகி மகிழ்ச்சி

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி(90). தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 2020ல் சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தில் பாட்டி வேடத்தில் நடித்தார். இந்நிலையில் திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.

இதுகுறித்து இவர் கூறுகையில், ‛‛90வது பிறந்தநாளில் இப்படி ஒரு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை சிறந்த அங்கீகாரமாக கருதுகிறேன். நான் பெற்ற விருதுகளில் பத்மஸ்ரீ விருதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். மத்திய அரசுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார் சவுகார் ஜானகி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !