உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறக்கும் முன்பே குழந்தை பெயர் வைத்த ஆல்யா!

பிறக்கும் முன்பே குழந்தை பெயர் வைத்த ஆல்யா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவிற்கும் திருமணமாகி ஏற்கனவே அய்லா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். சமீபத்தி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆல்யா பதிலளித்து வந்தார். அதில் ஒரு ரசிகர் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா பெண் குழந்தையாக இருந்தால் லைலா, ஆண் குழந்தையாக இருந்தார் அர்ஸ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஆல்யா தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். முன்னதாக பிரசவம் காரணமாக ஆல்யா சீரியலை விட்டு விலகுவாரா? என்ற ரசிகர் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா, சீரியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை. ஒரே ஒரு சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என பதிலளித்திருந்தார். ஆல்யாவின் ரசிகர்கள் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்காக வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !