உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழால் இணைவோம்: அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு

தமிழால் இணைவோம்: அனிருத், சிம்பு டுவிட்டர் பதிவு

இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் , வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சார் அமித்ஷா கூறியிருந்தார்.

இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ்தான் இணைப்பு மொழி என்ற கூறினார். மேலும் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் வரிகளை பதிவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது இசை அமைப்பாளர் அனிருத்தும், நடிகர் சிம்புவும் தமிழால் இணைவோம் என்று தங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !