உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்: ஓவியா கருத்து

சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்: ஓவியா கருத்து

நடிகை ஓவியா தற்போது படங்களில் நடிப்பதை விட தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்போதும் தனது கருத்தை வெளிப்படையாக கூறும் பழக்கமுடைய ஓவியா, சமீபத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவிலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். விழாவில் அவர் பேசுகையில், ‛கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !