அடுத்தடுத்து திருமண புகைப்படங்களை வெளியிட்டு மகிழும் நிக்கி கல்ராணி
ADDED : 1232 days ago
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இருவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண வரவேற்பில் அவர்களது நெருங்கிய திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இருவரது திருமணப் புகைப்படங்களும் குறைந்த அளவில்தான் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிக்கி அவரது சமூக வலைத்தளத்தில் அடுத்தடுத்து தங்களது திருமணப் புகைப்படங்களைப் பதிவிட்டு மகிழ்ந்து வருகிறார். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கேப்ஷனையும் பதிவிடுகிறார்.
திருமணத்திற்குப் பிறகும் நிக்கி கல்ராணி சினிமாவில் நடிப்பார் என்றே தெரிகிறது. அவரது கைவசம் எந்த ஒரு தமிழ்ப் படமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவரைத் தேடி வாய்ப்புகள் போகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.