கமல் சொன்ன டைம் டிராவல் - நெகிழ்ந்த ரவிக்குமார்
ADDED : 1210 days ago
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து அயலான் படத்தை இயக்கி உள்ளார். ஏலியன் தொடர்பான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. டிசம்பரில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசி உள்ளார் ரவிக்குமார்.
அதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வியந்து பார்த்த ஆளுமை(கமல்). அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டிராவல் பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.