உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனது கணவரின் காதலிகள் என் தோழிகள்: ஆலியா பட்

எனது கணவரின் காதலிகள் என் தோழிகள்: ஆலியா பட்

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஆலியா பட் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் இந்த நட்சத்திர ஜோடி பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் நடத்தும் 'காபி வித் கரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் மனம் விட்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகள் பற்றி ஆலியா பட்டிடம் கேட்கப்பட்டது இதற்கு பதில் அளித்த ஆலியா என் கணவரின் முன்னாள் காதலிகளுடன் எப்படி நட்பாக இருப்பது என்பது குறித்து எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இன்றும் எனக்கு நல்ல தோழிகள். எனக்கு அந்த இருவரையும் மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட கரன் ஜோஹரும் பதில் சொன்ன ஆலியா பட்டும் ரன்பீர் கபூரின் முன்னாள் காதலிகளின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைப் என்பது அனைவருக்கும் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !