'ஜோதி'யில் குழந்தை கடத்தல் சம்பவம்
ADDED : 1179 days ago
எஸ்.பி.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ள படம் ‛ஜோதி'. ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா க்ரூப், குமரவேல், சாய்பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள படம். கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிறந்த குழந்தையை இன்னொரு பெண் திருடிச் சென்றார். டி.எஸ்.பி சாந்தி என்ற போலீஸ் அதிகாரி 2 மணிநேரத்தில் குழந்தையை மீட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. குழந்தை கடத்தலின் பின்னணியில் இருப்பது யார். எதற்காக கடத்துகிறார்கள் என்கிற உண்மைகளை படம் பேசப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.