நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி
ADDED : 878 days ago
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. அடுத்து ஒரு பரபரப்பான திரில்லர் கதையுடன் கூடிய படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சமுத்திரகனி நடிக்க, முக்கிய வேடங்களில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.
மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.