சாதி, செல்வாக்கு, நாக்கப் புடிங்கிச் சாகலாம் - இயக்குனர் பிவி தரணிதரன்
'பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிவி தரணிதரன். 'ஜாக்சன் துரை' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் தளத்தில் கடும் கோபத்துடன் சில பதிவுகளை இட்டுள்ளார்.
“சாதி, செல்வாக்கு….ஒரு இயக்குனராக இருக்க வெட்கப்படுகிறேன். சாதி மற்றும் செல்வாக்கான ஆதரவு மட்டுமே தற்போதைய நிலையாக இருக்கிறது. எனது கனவுகளை நனவாக்க எனது ஐ.டி. பணியை விட்டு வந்தேன். ஆனால், இங்கு அரசியல் சக்தி மற்றும் செல்வாக்கு ஆகியவற்றால் மட்டுமே எல்லாம் நடக்கிறது. உங்க ஜாதி…… வெச்சு ஒரு கூந்தலும் பண்ண முடியாது….பாத்துக்கலாம் வாங்கடா, இப்படி ஏமாத்தி பொழக்கறதுக்கு… நாக்கப்புடிங்கிச் சாகலாம்..
கடந்த நான்கு வருடங்களாக நான் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன். சீரிய அறிவுடன் என்னை நிரூபிக்க இங்கு வந்தேன். ஆனால், செல்வாக்கும், சாதியும் மட்டுமே இங்கு வேலை செய்கிறது. நான் உதவியற்றவனாக இருக்கிறேன்,” என வெறுப்புடனும், கோபத்துடனும் பதிவிட்டுள்ளார்.