உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீம்பிஷரா பட இயக்குனர் உடன் இணையும் சிரஞ்சீவி!

பீம்பிஷரா பட இயக்குனர் உடன் இணையும் சிரஞ்சீவி!

தொடர் தோல்வி படங்களை தந்து வந்த சிரஞ்சீவிக்கு இந்த பொங்கலுக்கு வெளிவந்த 'வால்டர் வீரையா' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த ' போலா சங்கர்' படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் சிரஞ்சீவி தனது 157வது படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிரஞ்சீவி 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !