‛ட்ரீம் கேர்ள் 2' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
ADDED : 771 days ago
ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்த படம் 'ட்ரீம் கேர்ள்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த பாகத்தில் ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, அனன்யா பாண்டே இணைந்து நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் தயாரித்துள்ளனர். இதற்கு விமர்சகர்களிடம் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.10 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆயுஷ்மான் குர்ரானா நடித்து வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூலித்தது இப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.