எதிர்நீச்சல் தொடரின் புதிய சாதனை! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜனனி
ADDED : 914 days ago
எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதார்த்தமான கதை மாந்தர்களுடன் முற்போக்கான கருத்துகளை பொழுதுபோக்காய் செல்லும் இந்த சீரியலுக்கு குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைய தலைமுறையினர் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த தொடரின் கதாநாயகன் சக்திவேல் (சபரி பிரசாந்த்), கதாநாயகி ஜனனி (மதுமிதா) ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்நீச்சல் தொடர் மேலும் மேலும் வெற்றியடைய ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.