உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்த பேபி ஜோடி

வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்த பேபி ஜோடி

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியையும் பெற்றது. அதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வைஷ்ணவி சைதன்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களிடமும் வைஷ்ணவி வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில் இந்த ஜோடி புதிய படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பேபி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரவி நம்பூரி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். வரும் கோடை விடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் நாயுடு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !