உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் சொன்ன இரண்டு கதையும் விஜய்க்கு பிடிக்கவில்லை : கார்த்திக் சுப்புராஜ்

நான் சொன்ன இரண்டு கதையும் விஜய்க்கு பிடிக்கவில்லை : கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, பேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே .சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இவர் இயக்கி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யிடத்தில் இரண்டு முறை தான் கதை சொன்னதாகவும், அந்த இரண்டு கதையுமே அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். என்றாலும் விரைவில் விஜய் எதிர்பார்க்கும் வகையிலான அவருக்கு 100% பிடித்தமான கதையோடு சென்று, அதை சொல்லி அவரிடத்தில் கால்சீட் வாங்குவேன். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !