பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக இருந்தாரா?
ADDED : 704 days ago
சின்னத்திரை நடிகையான பிரேமி வெங்கட், ‛நாச்சியார்புரம்' தொடரின் மூலம் தொலைக்காட்சி சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தார். நாம் இருவர் நமக்கு இருவர், சுந்தரி, கண்ணே கலைமானே ஆகிய சில ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பே தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில் அண்மையில் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடராக பணியாற்றிய போது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் பிரேமி வெங்கட் நியூஸ் ரீடரா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.