ஹீரோயின் ஆக ஊசி போட்டேன்: சீரியல் நடிகை பகீர் பேட்டி
ADDED : 664 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' தொடர் டி.ஆர்.பி.,யில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாக்யஸ்ரீ நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பாக்யஸ்ரீ, தமிழில் தேவியின் திருவிளையாடல் படத்தில் தான் அறிமுகமானார்.
தனது திரையுலக அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்து கொண்ட அவர், 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்ததாகவும், அப்போது உடல் கொஞ்சம் பெரிய பெண் போல் இருக்க வேண்டுமென ஊசி போட்டுக்கொண்டதாகவும் கூறினார். மேலும், அதற்காக அப்போது போட்டுக்கொண்ட ஊசியால் தனது கர்ப்ப காலத்தின் போது பின் விளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.