உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வாழும்கலை' ரவி சங்கர் வாழ்க்கை சினிமா ஆகிறது

‛வாழும்கலை' ரவி சங்கர் வாழ்க்கை சினிமா ஆகிறது

ஆன்மிக மற்றும் தியான அமைப்பு 'வாழும் கலை'.இதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இவர் பல அமைப்புகளின், நாடுகளின் நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.

கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சிகர ஆயுத முன்னணி என்ற அமைப்புக்கும் 50 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்தப்போர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.

இந்த அமைதிப் பணியின்போது அவர் சந்தித்த அனுபவங்கள் தற்போது திரைப்படமாகிறது. திரில்லர் பாணியில் உருவாகும் இதை ஹிந்தியில் பதான், வார், பைட்டர் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். மகாவீர் ஜெயின் தயாரிக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்திருக்கிறது. இதில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !