உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை: நடிகர் சங்கம் முடிவு

தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை: நடிகர் சங்கம் முடிவு


நடிகர் விஷால், தனுஷ் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு, ஆக.,16 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.,11) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: இது மாதம் மாதம் நடக்கும் செயற்குழு கூட்டம் தான். படப்பிடிப்பை நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !