உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.350 கோடியில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படம்

ரூ.350 கோடியில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படம்

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' எனும் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. சமீபத்தில் இப்படத்தை பூஜை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமாக அறிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி பொருட்செலவில் உருவாகிறது என தெரிவிக்கின்றனர். இந்த படமும் அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !