உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்ன நடந்தது தெரியுமா? - சோயா கோபம்

என்ன நடந்தது தெரியுமா? - சோயா கோபம்

கேரள திரையுலகில் மாபெரும் புயலை கிளப்பியுள்ளது அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம். முன்னணி நடிகர்கள் பலரும் தலையில் துண்டை போட்டு ஓடி ஒளிந்து வருகிறார்கள். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அண்மையில் பிரபலமான நடிகை ஷாலின் சோயாவும் கேரள நடிகர் ஒருவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை சிலர் செய்தியாக வெளியிட, அதை பார்த்து கடுப்பான ஷாலின் சோயா, 'ஒரு நியாயம் வேணாமா? என்ன நடந்தது தெரியுமா? அந்த வீடியோ பல வருடங்களுக்கு முன் ஷூட்டிங் இடைவேளையில் டிக் டாக் வீடியோவிற்காக செய்தது. அந்த பிரச்னைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல. நீ ஒரு நியூஸ் சேனல் தானே? உனக்கு அறிவு இருக்கா?' என கடுமையாக சாடியிருக்கிறார். மேலும், ரசிகர் ஒருவர் ஆறுதல் கூறிய கமெண்ட்டில், 'இந்த கமெண்டுகளால் எனக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் எந்த தவறுமே செய்யவில்லை' என்றும் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !