பாதியில் நின்று போன மகா விஷ்ணு படம்
ADDED : 393 days ago
ஆன்மிக பேச்சாளர் ஆன மகா விஷ்ணு தற்போது பரபரப்பான நபராகி விட்டார். அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது வெளியிட்ட சில கருத்துக்களாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு படத்தை இயக்கினார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
'நான் செய்த குறும்பு' என்ற படத்தை எடுக்கப் பூஜை போட்டு, படப்பிடிப்பைத் தொடங்கினார். 'கயல்' சந்திரன், அஞ்சு குரியன் நடிப்பதாக அறிவித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் டிராப் ஆனது. படத்தின் கதையும் வில்லங்கமானது. ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்பதை தான் கதை.