உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் பிரியங்கா உபேந்திரா

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் பிரியங்கா உபேந்திரா


மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரியங்கா திரிவேதி என்ற பிரியங்கா உபேந்திரா. இவர் 2003ல் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்தார். பெங்காலி, ஹிந்தி படங்களில் நடித்து 'சூரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். 'ராஜ்யம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பிறகு 'ராஜா' என்ற படத்தில் அஜித் ஜோடியாக நடித்தார். பின்னர் 'காதல் சடுகுடு', 'ஜனனம்' படத்தில் நடித்தார். 2004ம் ஆண்டு வந்த 'ஜனனம்' படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம்.

தற்போது 20 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார். கன்னடத்தில் இவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து வரும் 'உக்ரவர்ததா' என்ற படம் தமிழில் 'உத்ராவதாரம்' என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தை குருமூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார். அஜய், சுமன், பவித்ரா லோகேஷ், பவன் ஆச்சார்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் பிரியங்கா அதிரடி பெண் போலீசாக நடித்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது. இதன் தமிழ் புரமோசனுக்காக தற்போது சென்னை வந்துள்ளார் பிரியங்கா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !