சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர்
ADDED : 312 days ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45வது படத்திற்கு இசையமைக்க இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் பென்ஸ் படத்திற்கு இசையமைக்கும் பாடகர் திப்பு - பாடகி ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்திற்கும் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார்.
மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இந்த படத்தை புதுமுக இயக்குனர் கார்த்தீஸ்வரன் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கும் கமிட்டாகி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.