உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷூட்டிங் துவங்கும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்பிய அக்ஷய் குமார் ; சல்மான்கான் வருத்தம்

ஷூட்டிங் துவங்கும் முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு கிளம்பிய அக்ஷய் குமார் ; சல்மான்கான் வருத்தம்


பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக 'ஸ்கை போர்ஸ்' என்கிற படம் வரும் ஜனவரி 24ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீப காலமாகவே தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் அக்ஷய் குமார் இந்த படத்தை ரொம்பவே நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாவதை முன்னிட்டு இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் அக்ஷய் குமார்.

அதன் ஒரு பகுதியாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த படத்தை புரமோட் பண்ணுவதற்கு திட்டமிட்டு இருந்தார் அக்ஷய் குமார். அதன்படி சில தினங்களுக்கு முன் அதாவது பிக்பாஸ் பைனல் தினத்தன்று ஷூட்டிங்கிற்காக புறப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கும் வந்தார் அக்ஷய் குமார். ஆனால் சல்மான்கான் வர சற்று தாமதமானதால் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார் அக்ஷய்குமார்.

இதுகுறித்து சல்மான்கான் கூறும்போது, “நான் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. ஆனால் அக்ஷய் குமார் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இன்னும் சில புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் தவிர்க்க முடியாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் கிளம்பிவிட்டார்” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !