உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன்

சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன்

மலையாளத்தில் 2018 படம் மூலம் பிரபலமானார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவரது இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இதனை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் 3 பட அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இதில் இந்த கூட்டணியில் உருவாகும் படம் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் ஜூட் ஆண்டனி ஜோசப்பின் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க போகிறதாம். இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். அவருக்கு வில்லன் கதாபாத்திரத்தில் இன்னொரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். அநேகமாக ஆர்யா நடிக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். சிம்புவிற்கு சொன்ன கதையில் தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கின்றார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !