உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில்

எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில்


தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக்லைப்' படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், நடிப்பில் இருந்து எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகதான் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.

நாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்ய முடியும். பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதை கருத்தில் கொண்டுதான் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதை ஒரு பொறுப்பாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற அந்த தீ எனக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. அது அணையும் வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்'' என்று பதில் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !