உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா

பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா


தமிழ் சினிமா ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்ரீப்ரியா, சிவாஜி, ரஜினி, கமல், கார்த்திக் என மூன்று தலைமுறை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.

ஆனால் அவர் சில படங்களை இயக்கவும் செய்தார். 1984ம் ஆண்டு 'சாந்தி முகூர்த்தம்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அவர் நடித்த 'ஆட்டுக்கார அலமேலு' படத்தின் வெற்றிக்கு பிறகு அதே பாணியில் 'எங்க ஊரு ஆட்டுக்காரன் 'என்ற படத்தை இயக்கினார்.

தொடர்ந்து தமிழில் 'நானே வருவேன், மாலினி 22 பாளையங்கோட்டை' படங்களை இயக்கினார். 'நாகினி' என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தெலுங்கில் இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !