உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர்

மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர்


இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் நாசர். குணசித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்துள்ளார். மாயன், அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் பல வருட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நாசர் நாயகனாக நடித்த 'அவதாரம்' படத்திற்கு இசை அமைத்த இளையராஜா இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். படத்தை, எக்ஸ்போரியா ஐஜீன் புரொடக்ஷன்ஸ், ஜென் வெர்ஸ் மற்றும் எம்பர்லைட் ஸ்டுடியோஸ் சார்பில் சசி நாகா,சுரேஷ் செல்வராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தனபால் பத்மநாபன் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரான படங்களுக்கு எப்பவும் மக்களிடத்தில் மதிப்பு அதிகம் இருக்கும். அன்று தொடங்கி இன்று, 'லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்கள் வரை மாபெரும் ஹிட் படங்களாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகை படமாக 'கடவுளின் வீட்டிற்குச் செல்லும் வழி' உருவாகி வருகிறது.

தந்தை - மகன் உறவு பற்றிய நெகிழ்ச்சி மிகுந்த இக்கதையின் நாயகனாக நாசர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !