உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல்

காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல்

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‛காந்தாரா' படம், 2022 செப்டம்பரில் ரிலீஸ் ஆனது. படத்தின் கதை, காட்சியமைப்பு, நடிப்பு, இசை மற்றும் கருவுக்காக அந்த படம் பெரிய ஹிட்டானது. 14 கோடியில் தயாரிக்கப்பட்ட படம், 400 கோடி வரை வசூலித்தது. உலகம் முழுக்க காந்தாராவுக்கு ரசிகர்கள் கிடைத்தன. 2 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றது. அடுத்த பாகமாக காந்தாரா 2 உருவானது. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் மீண்டும் அடுத்த பாகத்தையும் தயாரிக்கிறது.

காந்தாரா தி லெஜண்ட், சேப்டர் 2 என அதற்கு தலைப்பு வைக்கப்பட்டது. அடுத்த பாகமாக வந்தாலும், கதைப்படி காந்தாரா கதைக்கு முந்தைய நிகழ்வாக, இந்த பாகம் உருவானது. அக்டோபர் 2ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளாக நடந்து வந்த காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று ஒரு மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளார் ரிஷப் ஷெட்டி. அதில் கனவுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நம் ஊர், நம்ம மக்கள், நம்ம நம்பிக்கை, என் முதுகெலும்பாக தயாரிப்பாளர், என் குழு இருக்கிறார்கள். இது சாதாரண படம் அல்ல, 250 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு சக்தி, தெய்வத்துக்கு நன்றி. காந்தாரா உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

காந்தாரா 2 மேக்கிங் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=aopemV_lclI


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !