உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு

இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு

நடிகர் மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 29வது படத்தில் நடித்து வருகிறார். காடுகளை மையப்படுத்திய வீரதீர சாகச கதையாக இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. கிடைக்கும் இடைவெளிகளில் மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா கிளம்பி விடுகிறார்.

அந்த வகையில் தற்போது இலங்கைக்கு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மகேஷ்பாபு. அவரது மனைவி நம்ரதா சிரோத்கர் தான் எடுத்துள்ள செல்பி ஒன்றை அதை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இந்த பயணத்தை என்ஜாய் செய்வதை கூட்டத்தில் ஒருவனாக பின்னால் நின்று புன்முறுவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார் மகேஷ்பாபு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !