உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம்

பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கூலி'. இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ந் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு லோகேஷ் பேட்டி அளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் பராசக்தி படத்தில் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, “ கடந்த மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை படங்களில் நடிக்க வைக்க அணுகினார்கள். சமீபத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே நம்பி வாங்க பண்ணலாம் என்றார்கள். அந்தக் கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், கூலி படத்தின் பணிகள் பாதிப்படையும் என்பதால் நடிக்க முடியவில்லை. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !