உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ்

லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ்

அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் தினேஷ். அதன்பிறகு குக்கூ , திருடன் போலீஸ், விசாரணை, கபாலி, உள்குத்து என பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், கடந்த ஆண்டில் வெளியான லப்பர் பந்து படம் ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து அட்டக்கத்தியை தூக்கி விட்டு கெத்து தினேஷ் என்று அழைத்து வருகிறார்கள். தற்போது அவர் தண்டகாரண்யம் என்ற படத்தில் நடித்துள்ளார். தினேஷ் உடன் கலையரசன், ரித்விகா, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லப்பர் பந்து படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நூறு கதைகள் கேட்டுள்ளேன். என்றாலும் நான் எதிர்பார்ப்பது போன்று மாறுபட்ட கதைகள் அமையவில்லை. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் தினேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

avm
2025-09-05 17:56:54

தூங்கிவிடு