உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை

விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை


காமெடி நடிகர் ரோபோ சங்கர், (வயது 46) சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (செப்.,18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

துணை முதல்வர் உதயநிதி, நாம் தமிழர் கட்சியின் சீமான், விசிக திருமாவளன், தேமுதிக.,வின் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன், மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ரோபோ சங்கரின் உடல், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

நடனமாடி வழியனுப்பி வைத்த மனைவி
ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், உடல் முன்பு அவரது மனைவி பிரியங்கா நடனமாடி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார். ரோபோ சங்கர் மறைந்தாலும் அவரின் காமெடிகள் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !