கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த காந்தாரா படத்தின் முன்பகுதி தற்போது 'காந்தாரா சாப்டர் 1' பெயரில் தயாராகி உள்ளது. நாளை மறுநாள் (2ம் தேதி) இந்த படம் வெளியாக உள்ளது. ரிஷப் ரெட்டி இயக்கி, நடித்துள்ளார். கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியாகிறது.
கர்நாடகம், ஆந்திரா, மும்பையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் இன்று புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் கரூரில் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார்கள்.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமீபத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் கருத்தில் கொண்டு, நாளை (இன்று)சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த புரமோஷன் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்க வேண்டிய நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நன்றி, மேலும் தமிழகத்தில் உள்ள எங்கள் பார்வையாளர்களை மிகவும் பொருத்தமான நேரத்தில் சந்திக்க காத்திருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.