துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்!
தமிழில் தனுஷ் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்த பிரியங்கா மோகன், தற்போது கவின் நடிக்கும் ஒன்பதாவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணத்துக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ‛ஓஜி' என்ற படம் கடந்த 25ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ஒன்பது நாட்களில் 361 கோடி வசூலித்துள்ளது.
இப்படியான நிலையில் இன்று ஹைதராபாத்தில் ஒரு துணிக்கடையை திறந்து வைத்திருக்கிறார் பிரியங்கா மோகன். அந்த கடையை அவர் திறந்து வைக்க வருகிறார் என்றதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியுள்ளார்கள். இதன் காரணமாக தனது காரில் இருந்து கடையை நோக்கி சென்ற பிரியங்கா மோகனை ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொள்ள அவரை ரொம்ப கஷ்டப்பட்டு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ரசிகர்களின் தள்ளுமுள்ளு அதிகமாக இருந்ததால் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார் பிரியங்கா மோகன். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.