உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி!

82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி!


கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகி உள்ள 'காந்தாரா சாப்டர்-1' படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்து இருக்கிறது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸில் 82 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரிஷப் ஷெட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிகப்படியான வரவேற்பு கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அன்பும் பாராட்டும் முந்தைய படமான காந்தாரா பெற்றதை போலவே வலிமையாக உள்ளது. என்னுடைய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்'' என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !