உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்

‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம்

நடிகர் விக்ரமின் மகனான துருவ், ‛ஆதித்யா வர்மா' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தை விக்ரம் உடன் இணைந்து மகான் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களும் அவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்து தற்போது வெளியான 'பைசன்' படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து துருவ்வை தேடி பல வாய்ப்புகள் வருகின்றன. சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளனர். அவர்களில் ‛டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் கதை இவருக்கு பிடித்து உள்ளதாம். இந்த படம் தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளிவரலாம். கணேஷ் கே பாபு தற்போது ரவி மோகனை வைத்து 'கராத்தே பாபு' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !