காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்
ஹிந்தியில் 'யாரியன் 2' படம் முலம் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ போர்ஸ். தமிழில் சமீபத்தில் வெளிவந்த 'காந்தா' படம் மூலம் அறிமுகமானார். அடுத்து அவர் தெலுங்கில் நடித்துள்ள 'ஆந்திரா கிங் தலுகா' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. அப்படத்தின் நாயகன் ராம் பொத்தினேனியும், பாக்யஸ்ரீயும் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசு சமீபத்தில் வெளியானது.
இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்யஸ்ரீ, “படத்தில் நடிக்கும் போது ராம் உடன் நல்லதொரு பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்கு இடையில் இருப்பது நட்பு மட்டும்தான், ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது. அதனால், எங்களுக்குள் காதல் என்ற கிசுகிசு அதிகமாகியுள்ளது” என்றார்.
சினிமா காதல் பலவும், நட்பில் ஆரம்பித்து பின்னர் காதலில் போய் முடியும். இவர்கள் நட்பு எப்படி முடியப் போகிறது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.