உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரம்மாண்ட புராண காவிய கதையில் அல்லு அர்ஜூன்

பிரம்மாண்ட புராண காவிய கதையில் அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜுன், இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் 4வது முறையாக புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதுதொடர்பாக இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். இவர்கள் இணைந்த 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது.

இப்போது இணைய உள்ள, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதை சொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது. ஏற்கனவே ரன்வீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் சினிமா ஆகி வருகிறது. அனுமன் கதை அனிமேசனில் உருவாகி உள்ளது. அல்லு அர்ஜூன் கதை எந்த புராண கதை என்பது பலரின் கேள்வி ஆக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !