உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி

படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி


சமீப வருடங்களாகவே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் வெளியாகும்போது முதல் நாள் வசூல், அதன்பின் மொத்த வசூல், படம் சரியாக ஓடவில்லை என்றால் அந்த படத்திற்கு எவ்வளவு நட்டம் என்கிற விவரங்கள் சோசியல் மீடியாவில் ஒவ்வொரு விதமாக வெளியாகி வருகின்றன. சில விவரங்களை தயாரிப்பாளர் தரப்பே அறிவிக்கிறது.

இந்த நிலையில் மலையாள நடிகர் நிவின்பாலி இதுகுறித்து கூறும்போது, '2எதற்காக படத்தின் லாப நட்ட கணக்கு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது தேவையில்லாத ஒன்று'' என்று கூறியுள்ளார்.

நிவின்பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படம் நேற்று கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார் நிவின்பாலி. அங்கே பத்திரிகையாளர்களிடம் அவர் உரையாடியபோது கடந்த 2025ம் வருடத்தில் வெளியான மலையாள படங்களின் லாப நட்ட கணக்கு குறித்து சமீபத்தில் வெளியான பட்டியல் பற்றி நிவின்பாலியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நிவின்பாலி, “இப்படி லாப நட்ட கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது தேவையற்றது. இதற்கு முன்பு அது போல இருந்தது இல்லை. இப்படி அறிவித்தால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கும் பாதிப்பு. புதிதாக படம் தயாரிக்கலாம் என்று வருபவர்களையும் தயங்கி நிறுத்தி வைத்து விடும். படத்தின் லாப நட்ட கணக்குகள் படம் சம்பந்தப்பட்டவர்கள் உடனேயே மட்டும் இருப்பது தான் சினிமாவுக்கு நல்லது. எல்லா திரையுலகிலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மலையாளத் திரையுலகம் முன்னோடியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !