உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

மும்பை : இசையமைப்பாளர் இளையராஜா 'பத்மபாணி' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் வரும் 28ம் தேதி நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகமும் , மஹாராஷ்டிரா அரசும் இணைந்து, ‛அஜந்தா - எல்லோரா' சர்வதேச திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது . இதில், கலைத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு பத்மபாணி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது . இந்த ஆண்டுக்கான அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா வரும் 28ல் துவங்கி பிப., 4வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடக்கவுள்ளது. இந்த விழாவின் துவக்க நாளான ஜன., 28ல் ராஜ்யசபா எம்.பி.,யும், இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு பத்மபாணி விருது வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் அறிவித்துள்ளனர்

விருது பெறுவோருக்கு நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். முன்னதாக பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர் - எழுத்தாளர் சாய் பிரனாஜ்பே மற்றும் நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !