உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம்
ADDED : 3 minutes ago
தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பரவலாக நடித்து வருகிறார். உடற்கேலி குறித்து இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் எனது போட்டோவை லேப்டாபில் பெரிதாக்கி முழங்கைகள் கருமையாக இருப்பதை குறிப்பிட்டு, இன்னும் அழகாக இருக்கணும் என்றார். இது என்னை காயப்படுத்தியது, சோர்வாக்கியது. தொடர்ந்து இதுபோன்று நிறைய பாடிஷேமிங்கை திரையுலகில் சந்தித்தேன். என் பிறப்பை மாற்ற முடியாது. இதுபோன்ற விஷயங்களை புறம்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ பழகினேன்'' என்றார்.